பேய் பிடித்ததாக பூஜை.. ரூ.28 லட்சம் சுருட்டிய பெண் சாமியார்!
The woman priest who made 28 lakhs by performing rituals claiming to catch a ghost
2 வயது குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது என்று கூறி சிறப்பு பூஜைகள் செய்யரூ.28 லட்சம் மோசடி செய்த மராட்டியத்தை சேர்ந்த போலி பெண் சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் தேரதாலா கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான லட்சுமி என்ற பெண்னுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை.
இந்தநிலையில் லட்சுமியிடம் அவரது தோழி ஒருவர் மூலம் மராட்டிய மாநிலம் கொல்லாபுராவை சேர்ந்த சீமா சாம்பவி என்ற பெண் சாமியாரை செல்போனில் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது சீமா சாம்பவி, லட்சுமியிடம் தங்கள் மகளுக்கு பேய் பிடித்துள்ளதால் அதற்கு சிறப்பு பூஜைகள் செய்ய பல லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று கூறியுள்ளார்.இதனை நம்பிய லட்சுமி பூஜை செய்ய ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி சீமா சாம்பவி தனது வீட்டில் வைத்து குழந்தையின் பெயரில் சிறப்பு பூஜை செய்தார்.
அந்த வீடியோவை லட்சுமிக்கு அனுப்பி வைத்து பணம் வழங்கும்படி கூறியதன்படி அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் லட்சுமி அனுப்பி வைத்தார். இந்தநிலையில் பல நாட்கள் ஆகியும் குழந்தைக்கு உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.இதுவரை அவர் மொத்தம் ரூ.28 லட்சம் வரை சாமியாருக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி, சீமா சாம்பவியை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் 'சுவிட்ச்-ஆப்' என வந்தது.இதுகுறித்து லட்சுமி, பாகல்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பெண் சாமியாரை வலைவீசி தேடி வருகிறார்கள். அப்போது தான் சீமா சாம்பவி சாமியார் என்றும், பேய் ஓட்டுவதாக கூறி ரூ.28 லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.
English Summary
The woman priest who made 28 lakhs by performing rituals claiming to catch a ghost