பள்ளிக்கல்வித்துறை ஆணை! ஓய்வு பெரும் ஆசிரியர்களுக்கு இறுதி நாள் வரை மறு நியமனம் வழங்க இயலாது...! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றாலும், அவர்கள் கல்வியாண்டின் கடைசி வேலைநாள் வரை மறுநியமனம் செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கல்வி இயக்குனர், அந்த அரசாணையில் திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (அதாவது மே 31-ந் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதியளித்து ஆணை வழங்க அரசிடம் கேட்டிருந்தார்.

செயலாளர் டாக்டர் சந்திரமோகன்:

இதற்கு பதிலளிக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது," அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வுபெற்ற பின், மறுநியமனம் வழங்கும்போது கல்வியாண்டின் இறுதிநாள் (மே 31-ந்தேதி) வரை மறுநியமனம் செய்யும் கோரிக்கையினை ஏற்க இயலாத நிலையுள்ளது" என்று கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அதனை சுட்டிக்காட்டி, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School Education Department Order Retired teachers cannot be reappointed until last day


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->