உத்திரப்பிரதேசம்.! பப்ஜி விளையாட தடுத்த தாயை ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மகன்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தில் பப்ஜி விளையாட தடுத்ததால் தாயை, ஆத்திரத்தில் மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

உத்திர பிரதேசத்தின் கிழக்கு லக்னோவில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான 16 வயது சிறுவனை கேம் விளையாட கூடாது என்று தாய் தடுத்துள்ளார்.

இதனால் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறுவன் ஆத்திரத்தில், தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தாயை சுட்டுள்ளார்.

இதில் மகனால் சுடப்பட்ட தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, 16 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son who shot the mother in uttarpradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->