உ.பி: துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்.! தலையில் குண்டு பாய்ந்து தலைமை காவலர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்த போது தலையில் குண்டு பாய்ந்து தலைமை காவலர் உயிரிழந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தவர் தலைமைக் காவலர்(head constable) சந்தீப் யாதவ். இவர் நேற்று முன்தினம் மசௌலி காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் தனது வீட்டில் இருந்த தனது கை துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சந்திப் யாதவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சந்தீப் யாதவ் சனிக்கிழமை பணியில் சேர திட்டமிடப்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The head constable was killed when a bullet hit his head while cleaning the gun in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->