காதலனுக்காக போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. காத்திருந்து கைது செய்த காவல்துறை..! - Seithipunal
Seithipunal


காதலுக்காக போதைப்பொருள் கடத்திய இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போதை பொருள் கடத்தி வருவதாக விசாகப்பட்டின போதை ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. விமான நிலையத்திற்கு சற்று தொலைவில் அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் காத்திருந்தனர்.

இதனையடுத்து, காரில் வந்த அந்த இளம்பெண் தனது காதலனான ஹேமந்த்குமார் என்பவரிடம் 2 கிராம் போதை மருந்து , 18 போதை  மாத்திரைகள் ஆகியவற்றை வழங்கினார். இதனையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இளம்பெண்ணை கைது செய்த காவல்துறையினர் பொருட்கள் எப்படிகிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl who smuggled drugs for her boyfriend


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->