ஆம்புலன்ஸ் வரமறுப்பு.! இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை.!
The father carried the body of his dead son in the shoulder because the ambulance refused to come
ஆந்திரபிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வரமறுத்ததால் தந்தை இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செஞ்சய்யா. இவரது மகன் பசவையா(7) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் செஞ்சய்யா மற்றும் குடும்பத்தினர் நேற்று நிலத்தில் விவசாய வேலைசெய்து கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டின் அருகே இருந்த சிறுவன் பசவையாவை பாம்பு கடித்துள்ளது.
இதையடுத்து உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக, தந்தை செஞ்சய்யா கே.வி.பி. புரம் முதன்மை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதைத்தொடர்ந்து, சிறுவனின் உடலை வீட்டுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 108 ஆம்புலன்சை அணுகியபோது அவர்கள் சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்டனர். மேலும் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களும் சிறுவனின் உடலை ஏற்றி செல்ல மறுத்துவிட்டனர்.
இதனால் வேறு வழியின்றி தந்தை செஞ்சய்யா, மகன் பசவையாவின் உடலை, அவரது தோளிலேயே சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
The father carried the body of his dead son in the shoulder because the ambulance refused to come