தரிசனத்திற்கு சென்ற நபருக்கு நேர்ந்த சம்பவம்.. வைரலாகும் திக் திக் வீடியோ.!
temple dharisanam elephant statue stucked viral video
கோவிலில் தரிசனத்திற்கு சென்ற ஒரு நபர் யானை சிலைக்கு அடிப்பகுதியில் சிக்கிக்கொண்ட சம்பவமானது நிகழ்ந்து இருக்கின்றது.
குஜராத்தில் இருக்கின்ற ஒரு கோவிலுக்கு பக்தர் வந்த போது கோவிலில் இருக்கின்ற யானை சிலையை தரிசித்துவிட்டு பின் யானையின் கால்களுக்கிடையில் சிக்கிக்கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த நபர் யானையுடைய கால்களுக்கு நடுவில் சிக்கி கொண்ட போது தன்னுடைய கைகளை மட்டும் உடலை பயன்படுத்தி அதில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சிக்கின்றார். இருப்பினும் அவரால் வெளியேற முடியவில்லை. அவரை வெளி கொண்டுவர பல பக்தர்களும் முயற்சித்தனர்.
இந்த வீடியோவானது பகிரப்பட்ட சில நிமிடங்களில் 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. ஏற்கனவே இது போல ஒரு பெண்பக்தர் சிக்கி கொண்டுள்ள சம்பவம் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
English Summary
temple dharisanam elephant statue stucked viral video