நாளை காலை 10.30 மணி! நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்! நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!
Supreme Court to deliver AYODHYAVERDICT tomorrow
நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணி மணி அளவில் தீர்ப்பு உச்சநீதிமன்றம் வழங்குகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து நாளை காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தில்5 நீதிபதிகள் கொண்ட அமர்வு காலை பத்தரை மணிக்கு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என முன்கூட்டியே நாடு முழுவதும் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 10 ஆம் தேதி முதல் 14ம் தேதிக்குள் இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்பதாம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள், துக்கம் கடைப்பிடிக்க என எதற்கும் அனுமதி இல்லை என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Supreme Court to deliver AYODHYAVERDICT tomorrow