கொரோனா தொற்று தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது! உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்றும் பொது இடங்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்திருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 'எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது' என்று தெரிவித்துள்ளது. 

மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற மாநில நிர்வாகங்கள் விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme court ordered to dont compel for vaccination


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->