தேர்வு எழுதியும் ஆப்சென்ட் - முடிவில் வந்த அதிர்ச்சி தகவல்.!!
student fail in 10th public exam due to absent
குஜராத் மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு முடிவுகளை பார்த்து அதிர்ச்சியில் உரைந்தார்.
அதாவது, அவர் பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் தேர்வெழுதியபோதும், ஆப்சன்ட் என்பதால் தேர்வில் தோல்வி என்று ரிசல்ட் வந்ததால் அவர் குழம்பியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
அதன் பின்னர், அதிகாரிகள் சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட ஆறு பேருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி என்று தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பர்மர் தெரிவித்தார்.
English Summary
student fail in 10th public exam due to absent