பீகாரில் அதிர்ச்சி: 100 முறை கத்தியால் குத்திக்கொன்று... புதுமாப்பிள்ளை முப்புதரில் வீச்சு.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் 100 முறை கத்தியால் குத்தி புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சீதாமர்கி பகுதியை சேர்ந்தவர் சிந்து (20). இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிந்து இரண்டு நாட்களாக மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் வாலிபர் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன வாலிபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நேற்று அப்பகுதியில் உள்ள முட்புதரில் சிந்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிந்துவின் உடலை கைப்பற்றினர்.

இதில் சிந்துவின் உடலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சிந்துக்கும், அதே பகுதியை சேர்ந்த மகேதா என்ற வாலிபருக்கும் ஹோலி பண்டிகையன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிந்துவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

stabbed over 100 times in Bihar and body found in bushes


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->