மது அருந்த பணம் தர மறுத்த தாய்.. மகன் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


மது அருந்த பணம் தராததால் பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டம், முக்ரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்  ராம்வதி.இவருக்கு நரேஷ் என்ற மகன் இருக்கிறார். நரேஷ் அங்கு மது பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று தனது தாயிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டு உள்ளார். ஆனால், பணம் கொடுக்க ராம்வதி மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கட்டையா தாயை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் ராம்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடல மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நரேஷை  கைது செய்தனர். மது அருந்த பணம் தராததால் பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son kills His Mother


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->