#புதுச்சேரி || தாய் கண்டித்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
Son commits suicide by hanging due to mother reprimand in Puducherry
புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுச்சேரி சோனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் அஜித் குமார் (26). இவர் நேற்று முன்தினம் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
இதனை அவரின் தாய் லூர்து மேரி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார், அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Son commits suicide by hanging due to mother reprimand in Puducherry