நடுவழியில் ரயிலில் வந்த புகை - அதிர்ச்சியில் பயணிகள்.!  - Seithipunal
Seithipunal


நடுவழியில் ரயிலில்​ வந்த புகை - அதிர்ச்சியில் பயணிகள்.! 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து ஹவுரா நோக்கி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது இந்த ரெயிலில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

இதனால், இந்த ரெயில் வராங்கல் அடுத்த நெல்கொண்டா ரயில் நிலையம் அருகே பயணிகளின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது. உடனே ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு கீழே இறங்கினர். 

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே ஊழியர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பழுதான ரயில் சக்கரத்தின் பகுதியில் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். 

பல மணி நேரத்திற்கு பிறகு பழுது சரிசெய்யப்பட்டு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. ரயில் சக்கர பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

smokes came from train at telungana


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->