காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ளாத சிவசேனா.! மஹராஷ்டிர அரசியலில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மும்பையில் ஆகஸ்டு கிராந்தி மைதானத்தில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மஹராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி கட்சியான சிவசேனா கலந்து கொள்ளவில்லை. 

போராட்டத்தில் சிவசேனா கலந்து கொள்ளாதது குறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர், மஹராஷ்டிர மாநில தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அதன்பேரில் நாங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம். 

காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்து இருந்தால் நாங்கள் மகா விகாஷ் அகாடி கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருப்போம் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sivasena party not attend congress protest


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->