அதிர்ச்சி! திருடனுக்கு செருப்பு மாலை ஊர்வலம்...! காவலர்களின் உச்சக்கட்ட செயல்...!
Shock procession sandals for thief ultimate act police
ஜம்மு -காஷ்மீரின் பக்ஷி நகர் பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.40000 தை வாலிபர் ஒருவர் திருடியதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது பணம் திருடிய வாலிபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.

அப்போது பொதுமக்களை அந்த வாலிபர் கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.
அதன் பின்னர் அந்த வாலிபரின் சட்டையை கழற்றி அவரது கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.மேலும், காவலர்களிடம் இந்த செயல் மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்று பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Shock procession sandals for thief ultimate act police