தண்டவாளத்தில் தள்ளிவிட்ட இளைஞர்கள் - கை, கால்கள் இல்லாமல் கதறும் பள்ளி மாணவி.! - Seithipunal
Seithipunal


தண்டவாளத்தில் தள்ளிவிட்ட இளைஞர்கள் - கை, கால்கள் இல்லாமல் கதறும் பள்ளி மாணவி.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, ஒருவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். 

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ரயில் மாணவியின் மீது ஏறியதில், இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை துண்டானது.  இதில் படுகாயமடைந்த மாணவி வலித் தாங்க முடியாமல் அலறித் துடித்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு மாணவிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இளைஞர்கள் சிலர் கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.

மேலும், அவரை பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student lost leg and hand in uttar pradesh for accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->