கை கால்களை கட்டிப்போட்டு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்!
School girl raped by tying hands and legs
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பள்ளிக் கழிவறைக்குள் கை கால்களை கட்டிப்போட்டு 7ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 15-ஆம் தேதி கோபால்பூர் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது தூரத்து உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி தாய் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியை வலுக்கட்டாயமாக பள்ளியின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவளது கைகளையும் கால்களையும் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் ஜூன் 28-ஆம் தேதி நிகழ்ந்ததாகவும், ஜூன் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 22 வயது இளைஞர் கோலந்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.இது அந்தப் பகுதியில் நடக்கும் இரண்டாவது பாலியல் வன்கொடுமை சம்பவமும், ஒரே மாதத்தில் மாவட்டத்தில் நடக்கும் மூன்றாவது சம்பவமும் ஆகும்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும் 11 வயது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிறுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் தூரத்து உறவினர் மற்றும் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், பின்னர் கிராமவாசி ஒருவரால் சிறுமி மீட்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.ஜூன் 6-ஆம் தேதி கோலந்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
School girl raped by tying hands and legs