புதுச்சேரி! அரியாங்குப்பம் காவல் நிலையம் அருகே ரெளடி வெட்டிக்கொலை.!
Rowdy murder in ariyankuppam
புதுச்சேரியில் காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ரவுடி சரத். இவர் அரியாங்குப்பம் காவல் நிலையம் அருகே உள்ள அவரது மாமன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது இன்று காலை 4 மணி அளவில் ஒரு கும்பல் வீடு புகுந்து ரவுடி சாரத்தை, சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட ரவுடி சரத் மீது வெடிகுண்டு விச்சு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rowdy murder in ariyankuppam