35 ஆண்டுகள் கழித்த சேர்ந்த காதல் ஜோடி... கர்நாடகாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


இளம் வயது காதலியை 35 ஆண்டு காலம் கழித்து திருமணம் செய்த முதியவர்.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா (65). இவர் இளம் வயதில் இவரின் அத்தை மகளான ஜெயம்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.   இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தெரிவித்து, அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், ஜெயம்மாள் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சிக்கண்ணா ஜெயம்மாளின் நினைவிளேயே திருமணம் செய்யாமல் வாழந்து வந்துள்ளார். சமீபத்தில், சந்தித்து கொண்ட இருவரும் ஒருவரை நலம் விசாரித்து கொண்ட போது தான் திருமணம் செய்யாமல் அவர் வாழ்ந்து வந்ததும் ஜெயம்மாள் தனியே வசித்து வருவதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, தற்போதாவது இருவரும் சேர்ந்து வாழலாம் முடிவு செய்து மண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் நண்பர்கள் முன் திருமணம் செய்து கொண்டனர். 35 ஆண்டுகள் கழித்து சேர்ந்த காதல் ஜோடிக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Romantic couple who joined after 35 years


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->