பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன்: பரபரப்பு கிளப்பிய ரேவந்த் ரெட்டி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். 

இந்த மாநிலத்தில் 3.30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். என்னுடைய சகோதரிகளுக்கு ஒரு உறுதியை அளிக்கிறேன். 

உங்கள் சகோதரனாய் நானும், அமைச்சர் குழுவும், காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு உறுதுணையாக இருப்போம். 

மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவதற்கு நான் பொறுப்பேற்க்கிறேன். தெலுங்கானாவை தங்க தெலுங்கானாவாக மாற்றுகிறேன் என தெரிவித்திருந்தார். 

பெண்கள் வாக்குகளை மையப்படுத்தி காங்கிரஸ் இதுபோன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

முன்னதாக ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Revanth reddy promises 1 crore women make millionaires


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->