நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


பிஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்​னா​வின் சவுரி பகு​தி​யில் ‘டாக் பாபு' என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடி​யிருப்பு சான்றிதழ் வழங்​கப்​பட்டுள்​ளது. அந்த சான்றிதழில் டாக் பாபு​வின் தந்தை பெயர் குடா பாபு என்றும் தாயின் பெயர் குடி தேவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சான்​றிதழில் பிஹார் வரு​வாய் துறை அதி​காரி முராரி சவு​கான் கையெழுத்து மற்றும் நாயின் புகைப்​பட​மும் அச்​சிடப்​பட்டுள்​ளது. இந்த குடி​யிருப்பு சான்​றிதழ் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி, வைரலானதைத் தொடர்ந்து நாய்க்கு வழங்​கப்​பட்ட குடி​யிருப்பு சான்​றிதழை பிஹார் வரு​வாய் துறை நேற்று ரத்து செய்​தது.

மேலும் நாயின் பெயரில் விண்​ணப்​பத்தை சமர்ப்​பித்த நபர் யார் என்​பது குறித்து தீவிர விசா​ரணை நடத்​தப்​படு​கிறது. தவறிழைத்த அரசு அலு​வலர்​கள் மீது துறை ரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று வரு​வாய் துறை தெரி​வித்​துள்​ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்​துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

residence certificate to dog in bihar


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->