ஜம்மு- காஷ்மீர் எல்லையில் காட்டுத் தீ: வெடித்த சிதறிய கண்ணிவெடிகள்..!
Landmines exploded in a forest fire on the Jammu-Kashmir border
ஜம்மு- காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதன் காரணமாக அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடித்து சிதறியுள்ளன.
ஜம்மு - காஸ்மீரின் பூஞ்ச் மாவட்டம் பாலகோட் செக்டரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள காட்டில் திடீரென தீப்பிடித்து இருந்துள்ளது. பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறியுள்ளன. இந்த கண்ணிவெடிகள், பயங்கரவாத ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையாக வைக்கப்பட்டு இருந்தனவாகும்.
அங்கு 06 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. இருப்பினும் இந்த சம்பவத்தில் எவ்வித சேதாரமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், குறித்த காட்டுத்தீ பல அடி உயரத்திற்கு எரிந்தது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், நிலைமை தற்போது சீராக உள்ளதாக கூறியுள்ளனர்.
English Summary
Landmines exploded in a forest fire on the Jammu-Kashmir border