ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்: 4 வயது மகளைத் தவிக்கவிட்ட தாய்!
Reels Obsession Ends in Tragedy up
உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் மோகினி. இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவிடுவதில் ஆர்வம் கொண்ட இவர், ஒரு வித்தியாசமான 'ரீல்ஸ்' எடுக்கத் திட்டமிட்டார்.
தனது அறையில் நாற்காலியின் மீது நின்று, கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு தற்கொலை செய்வது போலப் படம்பிடிக்க முயன்றுள்ளார்.
கோர விபத்து: எதிர்பாராதவிதமாக நாற்காலி நகர, கால் தடுமாறியதில் கழுத்தில் இருந்த கயிறு இறுக்கியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மோகினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
4 வயது குழந்தையின் அழுகுரல்:
இந்த விபரீதம் நடந்தபோது வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. சில மணிநேரம் கழித்து அறைக்குள் நுழைந்த மோகினியின் 4 வயது மகள், தனது தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறினார். குழந்தையின் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
காவல்துறை எச்சரிக்கை:
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோகினியின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் ரீல்ஸ் எடுக்க முயன்றது உறுதி செய்யப்பட்டது.
இணையத்தில் கிடைக்கும் தற்காலிகப் புகழுக்காக, உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. ஒரு சில நொடி 'லைக்'குகளுக்காக, ஒரு பிஞ்சு குழந்தை இன்று தன் தாயை இழந்து தவிக்கிறது.
English Summary
Reels Obsession Ends in Tragedy up