அதிர்ச்சி: எலி விழுந்த மசாலாவில் பானி பூரி பந்தயம் - 31 பூரிகளை விழுங்கிய இளைஞர்!
Rat in the Masala Man Eats 31 Pani Puris to Win a Bet in Punjab
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அரங்கேறியுள்ள ஒரு விசித்திரமான மற்றும் அருவருப்பான சம்பவம், சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பந்தயமும்... எதிர்பாராத ட்விஸ்ட்டும்:
கரண் தஞ்சு என்பவரும் அவரது நண்பரும் ஒரு வினோதமான பந்தயம் கட்டிக்கொண்டனர்.
அவர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் ரூ. 50 பரிசு தருவதாகப் பேசப்பட்டது. இதற்காக இருவரும் ஒரு உள்ளூர் பானி பூரி கடைக்குச் சென்றனர். நண்பர் பானி பூரிகளைச் சுவைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு எலி மசாலா வாளிக்குள் விழுந்து நீந்தத் தொடங்கியது.
பிடிவாதம்:
எலி உயிருக்குப் போராடுவதைக் கண்டு விற்பனையாளர் அதைச் சிரமப்பட்டு வெளியேற்றினார். இத்தகைய சுகாதாரச் சீர்கேட்டை நேரில் பார்த்த பிறகும், தஞ்சுவின் நண்பர் போட்டியை நிறுத்த ஒப்புக்கொள்ளவில்லை.
பந்தய வெறியால், எலி விழுந்த அதே மசாலா நீரைப் பயன்படுத்தித் தொடர்ந்து 31 பானி பூரிகளை அவர் சாப்பிட்டு முடித்தார். நெட்டிசன்களின் ரியாக்ஷன்: இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், "அந்தக் கடையின் ரகசியச் சுவைக்கு அந்த எலிதான் காரணமோ?" எனப் பலரும் கிண்டலாகவும், அருவருப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Rat in the Masala Man Eats 31 Pani Puris to Win a Bet in Punjab