ராஜஸ்தானில் 10 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal



ராஜஸ்தானில் சட்டவிரோதமான முறையில் மணல் அள்ளுவது தொடர்பாக 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

ராஜஸ்தான் ஜெய்ப்பூர், டோன்ட், ஜோத்பூர், பில்வாரா, கரோலி, சிகார் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் பெஞ்ச் உத்தரவின் அடிப்படையில் பண்டி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோதமான கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் பதிவையும் கொண்ட வாகனத்தில் 40 மெட்ரிக் மணல் கொண்டு செல்லும் போது ஷாருக் என்பவர் கைது செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan 10 places CBI raids 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->