புதுச்சேரி | துணைநிலை ஆளுநராக இன்று ஜார்கண்ட் ஆளுநர் பதவியேற்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மாலை பதவி ஏற்க உள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். 

இவரது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூடுதலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மாலை பதவி ஏற்கிறார். இவருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமாணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry new Deputy Governor issued


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->