புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி மத்திய அரசுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம்.! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சார்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 5 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 7 மீனவர்கள், கடந்த 3ம் தேதி மாலை ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும் சிறை பிடித்தனர்.

அவர்களை விசைப்படகுடன் இலங்கை கொண்டு சென்று, கடற்படை முகாமில் ஒப்படைத்தனர். இதனையறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.இதனையடுத்து முதல்வர் ரங்கசாமி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை கடற்படையிடம் சிக்கியுள்ள புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை மத்திய அரசு மூலம் அழுத்தம் கொடுத்து மீட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Chief Minister Rangaswamy's letter to the central government to release the fishermen


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->