முடிவு எங்க கைல இருக்கு! மகாராஷ்டிரா அரசை ரவுண்டு கட்டும் மராத்தா சமுகம்!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மராத்தா சமூகத்தலைவர் மனோஜ் ஜரங்கே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மராத்தா சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மகராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் படங்களுக்கு கருப்பு மை பூசி மராத்தா சமுதாய மக்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜல்னா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மராத்தா சமுதாயத் தலைவர் மனோஜ் ஜரங்கே "மகாராஷ்டிரா அரசுக்கு எதற்காக கால அவகாசம் வேண்டும் நாங்கள் பொறுமையை கடைப்பிடிக்கிறோம். ஆனால் எதற்காக உங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதை தெளிவாக கூற வேண்டும்.

உங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். மராத்தா மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வரை நாங்கள் போராட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை. இனிமேல் நான் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்.

மராத்தா சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்று போல் செயல்படுகின்றன. அவர்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை" என குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

protest will continue until Maratha reservation is given


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->