பிரதமர் மோடி இன்று மாலை ஆந்திரா வருகை.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு!
Prime Minister Narendra Modi to visit Andhra Pradesh this evening Arrange to speak at a huge public meeting
ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை ஆந்திரா வருகைதர உள்ளார். பின்னர் ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
பிரதமர்நரேந்திரமோடி பல்வேறு மாநிலங்களுக்குசென்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்துவருகிறார். சமீபத்தில் டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கிவைத்தார். இந்தநிலையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை ஆந்திரா வருகைதர உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று விமானம் மூலம் மாலை 4.15 மணிக்கு விசாகப்பட்டினம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து அனக்காபள்ளி மாவட்டம், அச்சுதாபுரம் அருகே ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
பின்னர் ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்- மந்திரி பவன் கல்யாண், ஆந்திர பிரதேச பா.ஜ.க. தலைவர் புரந்தேரேஸ்வரி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதனை தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட 6 சாலைகள் மற்றும் ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர் மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
இதையடுத்து வெங்கடாதிரி வண்டில்லுவில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோவில் கலந்துகொண்டுவிட்டு பிரதமர் மோடி 6.50 மணிக்கு புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். விமான நிலையத்தில் 7.15 மணிக்கு கிளம்பி புவனேஸ்வர் செல்கிறார்.
English Summary
Prime Minister Narendra Modi to visit Andhra Pradesh this evening Arrange to speak at a huge public meeting