உலகிலேயே மிகவும் விரும்பப்படும் தலைவராக மீண்டும் முதலிடம் பிடித்துள்ள பிரதமர் மோடி; பின் தங்கியுள்ள பிரபல உலக தலைவர்கள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த  ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற பிரபல தரவு ஆய்வு நிறுவனம், உலகத் தலைவர்களின் மக்கள் செல்வாக்கு குறித்துத் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி, தற்போது '2 குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங்’ எனப்படும் புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், 76% மக்கள் ஆதரவுடன் உலகிலேயே மிகவும் விரும்பப்படும் தலைவராக இந்தியப் பிரதமர் மோடி, மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவரை 20% பேர் மட்டுமே ஏற்கவில்லை என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த ஜூன் 12 முதல்18-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 61% மக்கள் ஆதரவுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.ஏனைய முக்கிய உலகத் தலைவர்களின் நிலை பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43% ஆதரவுடனும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 41% ஆதரவுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 37% ஆதரவு பெற்றுள்ளார்.

அடுத்ததாக, கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (31%), இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் (25%), பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (25%) ஆகியோர் மிகவும் குறைவான மக்கள் ஆதரவையே பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ‘மார்னிங் கன்சல்ட்’ ஆய்வு நிறுவனம், ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்த குடிமக்களிடம் நேர்காணல் நடத்தி, அதன் அடிப்படையில் இந்த மதிப்பீடுகளைத் தயாரிக்கிறது. 

மீண்டும் இந்த ஆய்வு அறிக்கையில் பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளமை உலக அரங்கில் அவரின் செல்வாக்கு தொடர்ந்து வலுவாக இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi has once again topped the list as the most admired leader in the world


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->