உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 03 பேர் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்..!
President Draupadi Murmu approves the appointment of 03 Supreme Court judges
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நீதிபதிகள் நியமனம் சார்ந்த கூட்டம் மாதம் ஒருமுறை நடந்து வருகிறது. அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யாகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியத்தின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ‘‘கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல்.எஸ்.சந்துர்கர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகிய மூவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.குறித்த 03 நீதிபதிகளின் நியமனம் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
English Summary
President Draupadi Murmu approves the appointment of 03 Supreme Court judges