ஆந்திராவில் பார்வையற்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்.. போலீஸாரின் மகன் கைது.!
Police son sexual Harrasment for blind girl
பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இளம்பெண்ணை முன்னாள் போலீஸின் மகன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் சித்தூர் நகரின் கொண்டமிட்டா பகுதியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை இறந்து விட்டார். இந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை காவலரின் மகன் சின்னா என்கிற ஜெயச்சந்திரா கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிகிறார்.
ஜெயச்சந்திரா பார்வையற்ற பெண்ணை கடந்த சில நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்த ஜெயச்சந்திரா பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பித்து சென்று உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் திஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பார்வையற்ற பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தப்பியோடிய ஜெயச்சந்திரா ஜெட்டிங் கொட்டாய் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபரின் தந்தை காவல் துறையை சேர்ந்தவர் என்பதால் வழக்கை தவறாக வழிநடத்தும் வாய்ப்பிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியுள்ளார். மேலும், உயர் அதிகாரிகள் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Police son sexual Harrasment for blind girl