ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்த குழந்தை.. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்ட காவலர்.!!
police man rescuing a child who fell on the road
உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், வாகன போக்குவரத்தை ரோந்து பிரிவு காவலர் சுந்தர் ஷர்மா சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பும்போது தாயின் மடியில் இருந்த குழந்தை திடீரென தவறி கீழே விழுந்தது.
இதனை கண்ட போக்குவரத்து காவலர் சுந்தர், எதிரே வந்த பேருந்தை விரைந்து சென்று நிறுத்தினர். பின்னர், அந்த குழந்தையை பத்திரமாக மீட்டார்.
இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பிறவி வருகிறது. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்றிய காவலர் சுந்தர் ஷர்மா விற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
English Summary
police man rescuing a child who fell on the road