டென்மார்க் ராணியை சந்தித்த பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


ஜெர்மன் பயணத்தை முடித்துவிட்டு டென்மார்க் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெட்டே பெடரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து கோபன்ஹேகன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் முன் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து டென்மார்க் ராணி இரண்டாம் மார்க்கிரேத்தை, அவரது அரண்மனையில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

82 வயதான மார்க்கிரேத் 1972 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் மன்னராட்சியின் ராணி ஆக இருந்து வருகிறார். டேனிஷ் முடியாட்சி உலகின் மிகப் பழமையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi meet Denmark queen


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->