இரட்டை முக கவசங்களை அணிய வேண்டும்- முதல்வர் அவசர கோரிக்கை.!
Pinarayi Vijayan Speech about mask
கேரளாவில் அன்றாடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய நிலையில், பொது இடங்களில் மக்கள் வரும்பொழுது இரட்டை முக கவசங்களை அணியுமாறு அந்த மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன் வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்தில் கொரோனா பரவலை தடுக்கின்ற பொருட்டு பொதுமக்கள் அனைவரும் முக்கிய இடங்களில் கூடும் பொழுது, இரட்டை முக கவசங்களை அணிந்து வர வேண்டும்.
பொது இடங்கள் மட்டுமல்லாமல், கடைகள், அலுவலகங்கள் என்று அனைத்து இடங்களிலும் இரட்டை முக கவசங்களை அணிந்து வரவேண்டும். மதபோதகர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் இதுபோன்ற விழிப்புணர்வில் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Pinarayi Vijayan Speech about mask