சமோசா, ஜிலேபி சாப்பிடுபவர்கள் உஷார்!
People who eat samosas and jalebis beware
சமோசா, ஜிலேபி உள்ளிட்ட பழக்கமான சிற்றுண்டிகள் விரைவில் சுகாதார எச்சரிக்கையுடன் விற்கப்படலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள தகவல் பொதுமக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக, நகர பகுதிகளை問ளாக இந்தியாவில் உடல் பருமனுடையோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடி இந்தியர்கள் அதிக எடை கொண்டோ, பருமனாகவோ இருப்பார்கள் என ஆராய்ச்சி கணிப்புகள் தெரிவிக்கின்றன.நகர்ப்புறங்களில் தற்போது 5-ல் 1 பேர் உடல் பருமனில் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவமனைகளில், உணவுப்பொருட்களில் உள்ள எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவை சுட்டிக் காண்பிக்கும் பட்டியல்கள் வெளியிடப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் முதற்கட்டமாக, சமோசா மற்றும் ஜிலேபி போன்ற அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த உணவுகள் நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை கருத்தில் கொண்டு, விரைவில் சிகரெட் பாக்கெட்டுகள் போல ‘சுகாதார எச்சரிக்கை’ லேபிள் சேர்க்கப்படும் என இந்திய இருதயவியல் சங்கத்தின் நாக்பூர் பிரிவு தலைவர் டாக்டர் அமர் அமலே தெரிவித்துள்ளார்.
“இது மக்கள் உணர்வை தூண்டும் முயற்சி. சமோசா, ஜிலேபி போல பல உணவுகள் தொடர்ந்து ஆய்வுக்கு உள்ளாகி, பட்டியலில் சேர்க்கப்படும்,”என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
English Summary
People who eat samosas and jalebis beware