பவர் கட் நேரத்திலும் பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்த துரோகிகள்! NIA, போலீஸ் விசாரணையில் அம்பலம்! - Seithipunal
Seithipunal


“ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் இரகசிய ராணுவ நடவடிக்கையின் போது, இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் மின்தடை நிலவியிருந்த நேரத்திலும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்ளிட்ட நான்கு பேரும் முக்கிய ரகசியங்களை பாகிஸ்தானுக்குச் சொல்கின்றனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மே 6 ஆம் தேதி, ஜோதி மல்ஹோத்ரா தில்லிக்குச் சென்று பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷை சந்தித்ததாகவும், அடுத்த நாள் இன்னும் சில சந்திப்புகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நவுமான் எலாஹ் என்பவர் ஹரியாணாவில் காவலாளியாக இருந்த நிலையில் மே 13 அன்று கைது செய்யப்பட்டார். அவருடன் தேவேந்திர சிங் தில்லான் (கைத்தல்), மல்ஹோத்ரா (ஹிசார்), அர்மான் (நூக்) ஆகியோரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த முக்கிய தகவல்களை மின்தடை நேரத்திலும் பாகிஸ்தான் அமைப்புகளுடன் பகிர்ந்துள்ளனர் என ஹிசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங்க் குமார் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Operation Sindoor NIA Police Arrest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->