பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அதிகாரி பணியிடை நீக்கம்.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அதிகாரி பணியிடை நீக்கம்.!

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் அருகே ஹக்கிம்பேட் நகரில் மாநில விளையாட்டு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூத்த அதிகாரியாக இருக்கும் ஒருவர், மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக போலீசால் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட் நேற்று அறிவித்தார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officer suspend for sexuall harassment to students in telunagana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->