தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் இறக்கவில்லை.. குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ் தகவல்..!! - Seithipunal
Seithipunal


ஒரிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இன்று பிற்பகல் நிலவரப்படி 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 747 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் 56 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 190 பேர் ரயிலில் பயணம் செய்த நிலையில் அதில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று காலை ஒரிசா சென்று அடைந்தது. பாலசோர் மாவட்டம் பாகநாகாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த் "இதுவரை கிடைத்த தகவலின் படி தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை. பயணிகள் பட்டியலை வைத்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரேனும் விபத்தில் சிக்கி உள்ளாரா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் எண்ணிக்கை இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. முன்பதிவு செய்து பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலை வைத்து விவரங்களை சேகரித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார். ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு குழு இரு பிரிவுகளாக பிரிந்து ஆய்வை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதன்பிறகு ஒரிசா முதல் நவீன் பட்நாயக்கை தமிழ்நாடு அரசின் குழு சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No one from Tamil Nadu died in Odisha train accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->