திருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட ஆசையால், பரிதாபமாக உயிரிழந்த இளம்ஜோடிகள்.!!
new couple death in mysuru river
தற்போது உள்ள கலாச்சாரத்தில் திருமணம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது போட்டோ ஷூட் தான். திருமணத்திற்கு முன்பும் போட்டோ ஷூட், திருமணத்திற்கு பிறகும் போட்டோ ஷூட் என தற்போது உள்ள கலாச்சாரத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சமீபகாலமாக புதுமண தம்பதிகள் சேற்றில் புரண்டு புகைப்படம் எடுப்பது, அருவியில் குளிப்பது போன்ற புகைப்படம் எடுப்பது. இதற்கும் மேலே ஒரு படி சென்று ஆடைகளின்றி புகைப்படம் எடுப்பது என தற்போது திருமணமாகும் ஜோடிகளிடையே வழக்கமாக மாறி வருகின்றது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள முதுகுத்தூரில் கடந்த வாரம் சந்துரு-சசிகலா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் வருகிற 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே திருமணத்திற்கு முன்னதாக போட்டோ ஷூட் நடத்த திட்டமிட்ட இளம்ஜோடிகள் மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் தோணியில் அமர்ந்தவாறு போட்டோ ஷூட் நடத்தினர்.
தோணி எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியது, மீனவர் உட்பட மூவரும் ஆற்றில் கவிழ்ந்தனர். மீனவர் நீந்தி நீச்சல் தெரிந்த காரணத்தால் பத்திரமாக கரை ஏறினார். இளம் ஜோடிகள் நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களது உடலை மீட்கும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும். சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
new couple death in mysuru river