உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
New barometric depression is developing
வங்கக் கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது மே 6-ஆம் தேதிக்கு பிறகு தீவிரம் அடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் தற்போது 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
New barometric depression is developing