உ. பி : மத்திய ஆசிரியர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த இருவர் கைது.!
near uttar pradesh two peoples arrested for impersonators in exam
நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில், மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் பந்தாரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து தனிப்படை போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி, போலீசார் தேர்வு மையத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுபம் யாதவ் என்ற விண்ணப்பதாரருக்கு பதிலாக மணீஷ் குமார் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் தேர்வு எழுதிய மணீஷ் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பீகார் மாநிலத்தில் உள்ள கைமுரை சேர்ந்தவர் என்பதும், உண்மையான விண்ணப்பதாரரான சுபம் யாதவும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அதன் பின்னர் போலீசார் அவரையும் கைது செய்தனர். இதைதொடர்ந்து, அவர்களிடம் இருந்து இரண்டு போலி அடையாள அட்டைகள், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஏராளமான அனுமதிச்ச சீட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
மேலும், மணீஷ் குமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு, போட்டி தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வருவதாக ஒப்புக்கொண்டார்.
English Summary
near uttar pradesh two peoples arrested for impersonators in exam