மகாராஷ்டிரா : பண நெருக்கடி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முந்த்வா பகுதியில் கேசவ்நகரை சேர்ந்தவர் தீபக் தோதே. இவர் 'மணி டாட் காம்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், இதில் தீபக் தோதேவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் தீபக் தோதேவின் வீட்டில் இருந்து இரவு வரை யாரும் வெளியே வராமல் வீடு பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக் காரர், போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர்  வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். 

வீட்டின் உள்ளே, தீபக் தோதே, மனைவி இந்து தோதே, மகன் ரிஷிகேஷ், மகள் சமிஷிகா உள்ளிட்டோர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர். இதையடுத்து, போலீசார் அவர்களை மீட்டு சசூன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தீபக் தோதே பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிகளவில் நஷ்டம் அடைந்தது தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டு தனது மனைவி, மற்றும் பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. 

மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near maharastra four peples sucide for money problam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->