ஜார்கண்ட் : மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை.! ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு..! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பும் மாவட்டம் ஜிகலடா, கொனிசா மற்றும் ஹவாங்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் இணைந்த படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த பகுதியில், பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டையாக மாறியது.

இதைத்தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடினர். மேலும், அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த பகுதியில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிக்கியது. 

இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் மற்றொரு பிரிவினர் நேற்று மாநிலம் முழுவதும் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near jarkant maoists and security force gun fight


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->