விபச்சார கும்பலிடம் சிக்கிய இளம்பெண்.! டெல்லி மகளிர் ஆணையம் மீட்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10-ந்தேதி டெல்லி மகளிர் ஆணையத்திற்கு அரசு சாரா அமைப்பு ஒன்றிடம் இருந்து தகவல் ஒன்று வந்துள்ளது. 

அந்த தகவலில், "வேலை வாங்கி தருவதாக கூறி, நைஜீரியாவில் இருந்து 20 வயதுடைய இளம்பெண் ஒருவரை சட்டவிரோத மர்ம கும்பல் ஒன்று கடத்தியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன் படி, அந்த இளம்பெண் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லி மகளிர் ஆணைய குழு, டெல்லி போலீசார் மற்றும் என்.ஜி.ஓ. உள்ளிட்டோர் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டுள்ளது. அந்த கடத்தல் கும்பல் சிறுமியைக் கடத்தியது மட்டுமல்லாமல், அவருடைய கடவு சீட்டையும் முடக்கி வைத்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் டெல்லி மகளிர் ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாவது, "இதேபோல், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விபசார தொழிலுக்காக சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் அந்த கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

இந்த தகவலை டெல்லி மகளிர் ஆணைய தலைவி உடனடியாக டெல்லி போலீசாரிடம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஒரு விளக்க அறிக்கை ஒன்றையும், 20 வயதுடைய இளம்பெண்ணின் ஆவணங்கள் மற்றும் கடத்தல் கும்பலிடம் சிக்கிய மற்ற இளம்பெண்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்கும்படி கேட்டு உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near delhi nigeria young girl rescue in prostitution gang


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->