ஒரு சேலைக்காக மகனை கட்டி தொங்க விட்ட தாய்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஒரு சேலை எடுப்பதற்காக பெண் ஒருவர் தனது மகனை பத்தாவது மாடியிலிருந்து இருந்து 9வது மாடிக்கு இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரீதாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பத்தாவது மாடியில் வசிக்கும் பெண்ணின் சேலை ஒன்பதாவது மாடியில் உள்ள பால்கனியில் விழுந்துவிட்டது. அந்த வீடு பூட்டி இருந்ததால் அங்கு விழுந்த சேலையை எடுப்பதற்காக அந்த பெண் தனது மகனை பத்தாவது மாடியிலிருந்து ஒன்பதாவது மாடி பால்கனிக்கு போர்வை ஒன்றால் கட்டி கீழே இறங்கி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனும் ஒன்பதாவது மாடியில் இறங்கி சேலையை எடுத்துள்ளன். அதன் பிறகு உறவினர்கள் அந்த சிறுவனை மேலே தூக்கினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

ஒரு சேலைக்காக மகனின் உயிரை பணயம் வைத்து இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபட வேண்டுமா என சமூக வலைதளங்களில் பலரும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother hangs her son for a sari Video goes viral


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->