கர்நாடக தேசிய நெடுஞ்சாலை நெருப்புக் குளமாக மாறிய தருணம்...! சித்ரதுர்கா அருகே பேருந்து-லாரி மோதலில் 17 பேர் உயிரிழப்பு...!
moment Karnataka national highway turned fiery inferno17 people killed bus lorry collision near Chitradurga
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவை நோக்கிச் சென்ற படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து, அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரை தகர்த்து, நேருக்கு நேர் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர மோதலின் தாக்கத்தில், பேருந்தும் லாரியும் சில நொடிகளில் தீப்பற்றிக் கொண்டு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பேருந்துக்குள் சிக்கியிருந்த பல பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். தீயின் கோரத்தால் பேருந்து முழுவதும் புகைமூட்டமாக மாறி, மீட்பு பணிகளை மேலும் சவாலாக மாற்றியது.
இந்த பயங்கர விபத்தில் 17 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை அமைதியை கிழித்த இந்த பேருந்து, அப்பகுதி மக்களையும் தீ விபத்து, பயணிகளின் உறவினர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
moment Karnataka national highway turned fiery inferno17 people killed bus lorry collision near Chitradurga