என் வாழ்வை முடித்து கொள்கிறேன்.. 6வது மாடியில் இருந்து குதித்த மாடல் அழகி..! - Seithipunal
Seithipunal


ஹோட்டலின் 6-வது மாடியிலிருந்து மாடல் அழகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்தவர் குங்குன். இவர் மாடலாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் ஜோத்பூரில் ரத்தனடா என்ற பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார்.

அப்போது தனது தந்தைக்கு போன் செய்து அவர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள போவதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். காவல்துறை அங்கு செல்வதற்கு முன்பாகவே இந்த ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

உடனடியாக அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Model commits suicide by jumping from 6th floor


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->