முதல்வரை எதிர்த்தால் உயிரோடு எரித்து புதைத்து விடுவேன்- அமைச்சரின் பகிங்கர மிரட்டல்.!
minister speech about ncr supports and modi
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கூட்டம் நடத்தினர்.
அப்போது துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா தலைமையில் இந்தக் கூட்டமானது நடைபெற்றது. அதில், உத்தரப்பிரதேசத்தின் அமைச்சரான ரகுராஜ்சிங் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது, "நாடு முழுவதும் இருக்கும் ஒரு சதவீத மக்கள் மட்டும்தான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கின்றனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்ப்பவர்களை உயிரோடு புதைத்து விடுவேன்." என்று எச்சரித்து இருக்கின்றார்.
பொதுவெளியில் இப்படி வெளிப்படையாக கொன்றுவிடுவேன் என அமைச்சர் மிரட்டி எடுப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
minister speech about ncr supports and modi